போக்குவரத்து நெரிசலை குறைக்க, சென்னையில் பாம்குரோவ் உணவகத்தில் இருந்து கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வரை,64 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்க உள்ளதாக மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் தலைநகரமாக சென்னை காணப்படுவதால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு
மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் அதிகளவில் சென்னையில் வேலை நிமித்தமாக வசித்து வருகின்றனர். இதே போன்று, தமிழ்நாடு மட்டுமின்றி அருகில் இருக்கக்கூடிய ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா என பல்வேறு மாநில மக்களும் சென்னையில் வசித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவ்வாறு சென்னையில் சுமார் ஒரு கோடி மக்கள் வசித்து வருகின்றனர். குறைந்த பரப்பளவில் சுமார் ஒரு கோடி மக்கள் வாசித்து வருவதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், பணிக்கு செல்லும் போதும், பணி முடித்துவிட்டு வீடு திரும்பும் போதும் அண்ணா சாலை, கிண்டி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு என்ன பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : “24 மணிநேரமும் தேர்தல் ஆணையம் கவனமாக கண்காணிக்க வேண்டும்” – கோவையில் எல்.முருகன் பேட்டி!
அதனை தடுக்கும் விதமாகத்தான் சென்னை மாநகராட்சி சார்பாக அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில், சாலைப் பணிகளை விரிவாக்கம் செய்தல், மெட்ரோ சேவைகளை அதிகரித்தல், மேம்பாலம் கட்டுதல் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிக நெரிசல் ஏற்படும் பகுதிகளை இனங்கண்டு அந்தப் பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணியை மாநகராட்சி அமல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் கோடம்பாக்கம், ஜெமினி, வடபழனி பகுதிகளுக்கு மையப் பகுதியாக
காணப்படும் வள்ளுவர் கோட்டத்தில் தினந்தோறும் காலையிலும், மாலையில் அதிகமான
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதை தடுக்க வள்ளுவர் கோட்டம் சாலையில் சிக்னல் மூலம் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் சிக்னல் இருந்தாலும் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
மேலும், மாலை நேரங்களில் பணி முடித்துவிட்டு வரும் பொதுமக்கள் கூட்டத்தினால் தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் போன்ற முக்கிய பகுதிகளுக்கு செல்ல வாகனங்கள் நான்கு புறம் காத்திருக்கின்றனர். அதனை தடுப்பதற்காக பாம்குரோவ் உணவகத்தில் இருந்து கோடம்பாக்கம் வரை மேம்பாலம் கட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மேம்பாலத்தின் முழு விவரம் :
இந்த மேம்பாலம் பாம்குரோவ் ஹோட்டல் பகுதியில் தொடங்கி கோடம்பாக்கம்
நெடுஞ்சாலையில் உள்ள மண்பானை செய்யும் பகுதி வரை சுமார் 520 மீட்டருக்கு புதிய
மேம்பாலம் அமைய உள்ளது. இந்த மேம்பாலப் பணி ரூ. 64 கோடியே 5 லட்சம் மதிப்பில் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த மேம்பாலம் பணிக்கு அரசு இடம் மட்டுமின்றி
தனியார் இடங்களையும் கையகப்படுத்தப்படுகிறது.
இந்த பாலம் கட்ட 10,000 சதுர அடி மீட்டர் நிலம் தேவைப்படுகிறது. இந்த பகுதியில் அரசு சொந்தமான நிலம் எவ்வளவு உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ததில் 8,000 சதுர அடி மட்டும் அரசுக்கு சொந்தமாக இருந்ததுள்ளது. மீதமுள்ள 2000 சதுர அடி தேவைப்படும் பட்சத்தில், தனியாரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. அந்த நிலையில் சாலை ஓரம் உள்ள சிறிய கடையின் உரிமையாளர்களின் ஒப்புதலோடு அகற்றலாம் என்ன முடிவு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மாநகராட்சி அதிகாரிகள் கடையின் உரிமையாளர்களிடம் சென்று
இந்த பகுதியில் புதிய பாலம் வரவுள்ள நிலையில் சாலையோர நிலத்தை அரசுக்கு வழங்க
வேண்டும் என கேட்டுள்ளனர். கடையின் உரிமையாளர்கள் நிலத்தை கொடுக்க கடந்த இரண்டு மதங்களாக மறுப்பு தெரிவித்து வந்தனர். அதனை தொடர்ந்து ஒரு மாதங்களுக்கு பிறகு மீண்டும் மாநகராட்சி அதிகாரிகள் கடையின் உரிமையாளிடம் சென்று நிலம் வழங்குவது குறித்து பேசி உள்ளனர்.
அதிகாரிகள், அந்த பகுதியில் உள்ள கடை என்ன மதிப்பு இருக்கிறதோ அதே மதிப்பை (பணம்) உரிமையாளர்களுக்கு கொடுக்க உள்ளதாக முடிவு செய்துள்ளனர். இரண்டு மாத பேச்சுவார்த்தைக்கு பின் 2000 சதுர அடி இடம் தனியாரிடம் பெற ஒப்புதல் பெறப்பட்டது. மேம்பாலம் கட்டுமான பணி வருகின்ற ஜூன் மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. ஜூன் மாதம் தொடங்கப்பட உள்ள மேம்பால பணிகள்,2024-2025 என இரண்டு ஆண்டுகளில்
முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த பாலத்தில் நான்கு வழி பாதியாக அமைய உள்ளது.
இந்தப் பாலத்தின் வடிவம் என்பது ஒரு S வடிவில் கொண்ட மேம்பாலமாக அமையுள்ளதாக கூறப்படுகிறது, புதிய மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கினால் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும். அதனை தடுக்கும் விதமாக மாநகராட்சி சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக வாகனங்கள் திருப்பி விடப்பட்டு வரும் நிலையில்,மேலும் இந்த பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணியால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதையும் படியுங்கள் : கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
இந்த மேம்பாலம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
“வள்ளுவர் கோட்டம் சிக்னல் முன்பு உள்ள இரு வழி பாதையினால் தான் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதியில் மேம்பாலம் அமைவதில் பெரும்பாலும் போக்குவரத்து நெரிசல்கள் குறைக்கப்படும். வள்ளுவர் கோட்டம் முக்கிய பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த பகுதியில் மேம்பாலம் அமைப்பது சிறந்தது தான்.
மேம்பாலத்தின் கட்டுமான பணிகளின் போது மட்டுமே பொதுமக்கள் மிகவும்
சிரமத்துக்கு உள்ளாளர்கள். கட்டுமான பணிகள் முடிந்த பிறகு அரை மணி நேரத்தில் செல்லக்கூடிய இடத்திற்கு பத்து நிமிடங்களில் சென்று விடலாம். இந்த ஜெமினி பாலம் வழியாக வரும் ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டால், அதிலிருந்து விடுபட அரை மணி நேரம் ஆகிறது. இந்த மேம்பாலம் கட்டுமான பணிகள் முடிந்த பிறகு சுலபமான முறையில் இந்த பகுதியை கடக்கலாம்”
இவ்வாறு பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.