நாட்டிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வுமுறை!

நாட்டிலேயே முதன்முதலாக தடகள போட்டியின் தேர்வு முறையை டிஜிட்டல் மயமாக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.  தடகள போட்டியின் தேர்வு முறையை தமிழ்நாடு அரசு டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது. நாட்டிலேயே, தமிழ்நாட்டில் முதல்முறையாக டிஜிட்டல்…

நாட்டிலேயே முதன்முதலாக தடகள போட்டியின் தேர்வு முறையை டிஜிட்டல் மயமாக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. 

தடகள போட்டியின் தேர்வு முறையை தமிழ்நாடு அரசு டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது. நாட்டிலேயே, தமிழ்நாட்டில் முதல்முறையாக டிஜிட்டல் தேர்வு முறை அறிமுகமாக உள்ளது. தடகளப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பெயர், வயது உள்ளிட்ட விவரங்களின் பதிவு மற்றும் தரவரிசையின் துல்லியத்தை உறுதி செய்யும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிஜிட்டல் முறையில் வெளிப்படைத் தன்மை மேம்படுத்தப்படுவதோடு, விளையாட்டு வீரர்கள் தங்கள் செயல்திறன் அளவீடுகளை ஒப்பீடு செய்து கொள்ளவும் உதவும் எனத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சியில், விளையாட்டு வீரர்களின் தரவுகள் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படுவதால் வீரர்களும் உடனுக்குடன் தங்கள் மதிப்பீட்டை அறிய உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.