புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கிளிக்குடி அருகே உள்ள மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாரதி என்ற இளைஞர், கடந்த 2018ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு அருகே வசித்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாரதியை கைது செய்தனர். இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாரதிக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் தலா 5 ஆண்டு கால சிறை தண்டனை விதித்தும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒன்பது மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இதைத்தவிர பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.