நெல்லை அருகே ஆண் உடை அணிந்து வந்து மாமியாரை கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், வடுகன்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமிக்கு திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ராமசாமியின் தாய் சீதா ராமலட்சுமிக்கும், மகாலட்சுமிக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், ஆத்திரத்தில் இருந்த மகாலட்சுமி, அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாமியார் சீதா ராமலட்சுமியை ஆண் வேடம் அணிந்து சென்று சரமாரியாக கம்பால் தாக்கிவிட்டு, அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து சென்றுள்ளார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டது மகாலட்சுமி என கண்டுபிடித்தனர்.
இதையும் படியுங்கள் : ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் இத்தனை டாட் பால்களா?? பிசிசிஐ-ன் முன்னெடுப்பால் பசுமையாக மாறப்போகும் இந்தியா!!
இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீதா ராமலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை
வழக்காக மாற்றிய போலீசார், மகாலட்சுமியை கைது செய்தனர்.