உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: முக்கிய அம்சங்களை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ன் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “உலக முதலீட்டாளர்கள் மாநாடு…

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ன் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நெருங்கி வருவதால், எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 30,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் எங்கள் பிரச்சாரங்கள், #TitansofTamilNadu மற்றும் #OneTrillionDreams ஆகியவை உற்சாகத்தைத் தூண்டியுள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 450+ சர்வதேச பிரதிநிதிகள், 170 உலகப் புகழ் பெற்ற பேச்சாளர்கள் மற்றும் 50 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வதுடன், தமிழ்நாட்டின் தொழில் வளத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வண்ணம் அமையவுள்ளது.

26 தலைமையாளர்கள் இந்த மாநாட்டின் அமர்வுகளை வரிசைப்படுத்தியுள்ளோம். ஒரு MSME பெவிலியன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைப்பு பெவிலியன், பல நாட்டு அரங்குகள் மற்றும் Startup TN பெவிலியன் ஆகியவை இந்த மாநாட்டில் அமையவுள்ளன. பிரதிநிதிகள் மாநிலத்தின் தொழில்துறை அதிசயத்தைக் காணவும், வணிக ஒத்துழைப்புகளை வளர்க்கவும் ஒரு அருமையான வாய்ப்பை வழங்குகிறது.

தமிழ்நாட்டின் தொழில்துறை மரபைக் கொண்டாடுவதிலும், நமது மாநிலம் வழங்கும் அபரிமிதமான ஆற்றலைப் பயன்படுத்துவதிலும் எங்களுடன் சேருங்கள்!” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

முக்கிய அம்சங்கள்

  • முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வரும் 7-ம் தேதி, தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் துவக்கிவைப்பார்.
  • இந்த மாநாட்டில் “1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கான தமிழ்நாட்டின் பார்வை” (“Tamil Nadu Vision $1 Trillion”) எனும் ஆய்வறிக்கை வெளியிடப்படும்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டான்ஃபண்ட் (TANFUND) திட்டத்தை துவக்கி வைப்பார்.
  • இந்த மாநாட்டில் செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கை 2024, (Semiconductor and Advanced Manufacturing Policy, 2024) வெளியிடப்படும்.
  • 30,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பதிவு செய்துள்ளார்கள்.
  • 450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கு கொள்வார்கள்.
  • 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
  • சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க், மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் இந்த மாநாட்டின் அதிகாரபூர்வ பங்குதார நாடுகளாக உள்ளனர்.
  • 26 அமர்வுகளில் 170க்கும் மேற்பட்ட உலக புகழ் வாழ்ந்த பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள்.
  • மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சோம்நாத் உட்பட தேசிய மற்றும் உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை நிர்வாகிகள், மற்றும் பலர் சிறப்புரையாற்றுவார்கள்.
  • சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உட்பட தொழில் துறையின் அரங்கம் (Pavilion), புத்தொழில் நிறுவனங்களின் அரங்கம், தமிழ்நாடு தொழிற்சூழல் அரங்கம், மற்றும் சர்வதேச அரங்கம் இந்த மாநாட்டின் சிறப்பம்சமாகும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.