30 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

எங்கள் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிப்பதாக இருக்கும்- ஜெயக்குமார்

இந்த இடைத்தேர்தல் வெற்றியானது நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிப்பதாக எங்கள் வெற்றியும்,  திமுகவின் தோல்வியும் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தென்னகத்தின் முதல் பொதுவுடைமைவாதியான சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 77வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி அருகே உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்தியாவிலேயே பொதுவுடைமை கருத்தை முதன்முதலில் கொண்டு வந்து மே தினத்தை கொண்டாடிய பெருமை சிங்காரவேலருக்கு தான் சேரும். 9 ஏக்கர் 20 சென்ட் அவரின் நிலத்தை கல்விக்காக வழங்கினார். மூட நம்பிக்கை, சமூகத்துக்கு ஒவ்வாத கருத்துக்கள், பெண்ணுரிமை, சமூகம் தலைநிமிர எப்படி செயல்பட வேண்டும் என அறிவுப்பூர்வமான கருத்துக்களை சமூகத்துக்கு வழங்கியவர். அதனால் தான் அவரை சிந்தனை சிற்பி என்கிறோம்.

இதையும் படிக்கவும்; RRR படம் சிறப்பாக இருந்தது; ராஜமௌலியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர் ஸ்பீல்பெர்க்

இன்று சிலர் இருக்கிறார்கள் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொண்டு கோயில், கோயிலாக செல்கிறார்கள். சிந்தனை சிற்பி அய்யங்கார் குடும்பத்தில் பிறந்து இருந்தால் மாஸ்கோவில் சிலை வைத்திருப்பார்கள். ஆனால் அவர் மீனவர் குடும்பத்தில் பிறந்ததால் அவர் புகழ் மறைக்கப்பட்டது என்று அறிஞர் அண்ணாவே சொல்லி இருக்கிறார்.

ராயபுரத்தில் நினைவு மண்டபம் ஜெயலலிதா ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது.
சிங்காரவேலர் பற்றி ஆராய்ச்சி கட்டுரை எழுதுபவர்களுக்கு திருவள்ளுவர் தினத்தில் விருது வழங்கப்படும் என்று அறிவிப்பு அளித்து விருதுகளும் வழங்கப்பட்டது. அரசு விழாவாக கொண்டாடவும் அவர் எடுத்த முடிவுகள் தான் காரணம். திமுக ஆட்சியில் இவருக்கு புகழ் சேர்க்கவில்லை. அதிமுக அவருக்கு அனைத்து வகையிலும் புகழ் சேர்த்தது என்று கூறினார்.

ஈரோடு தேர்தல் ஓபிஎஸ் வேட்பாளருக்கு முன் மொழிவதற்கும், வழி மொதுவதற்கும் ஆள் இல்லை. டிடிவிக்கு தேர்தல் என்றாலே பயம். நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும் தில்லுடன் தேர்தலில் போட்டியிடுகிறோம். ஆனால் திமுக காங்கிரஸ் கட்சியை நிறுத்துகிறது. தில் இருந்தால் அவர்கள் நிற்க வேண்டியது தானே? என்று கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிப்பதாக எங்கள் வெற்றியும், திமுகவின் தோல்வியும் இருக்கும். மொத்த அமைச்சர்களும் ஈரோட்டில் தான் முகாமிட்டுள்ளனர். முதல்வரும், உதயநிதியும் மட்டுமே சென்னையில் உள்ளனர். ஏன் இரவோடு இரவாக ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் அறிவித்த பின்னர், அனைத்து சாலை பணிகளையும் செய்கிறார்கள். இதற்கு முன்பு ஏன் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்து வருகிறார்கள் என குற்றம் சாட்டினார்.85% தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் கூறுகிறார். உலகத்தில் இவரை போன்று பொய் சொல்பவரை நான் பார்த்ததே இல்லை. மீனவர்கள் வாழ்வாதரத்தை அளித்து நினைவு சின்னம் தேவையா? அறிவாலயத்தில் 10 ஆயிரம் அடி  சிலை கூட வைத்துக் கொள்ளுங்கள், நிலவு வரை வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் பணத்தில் அமைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

ரூ.81 கோடி எங்கிருந்து வரும். அரசு கடினமான நிதி நெருக்கடி இருப்பதாக சொல்கிறார்கள். அதிமுக பேனா சின்னம் வைப்பதை எதிர்க்கிறது. மக்கள் நலனுக்காக கமல் கட்சி தொடங்கவில்லை. திமுக உடன் இணைந்து சலுகைகள் பெறும் நோக்கத்தில் தான் கட்சி தொடங்கினார். கமலை திமுகவின் பி டீம் என்று நான் ஏற்கனவே சொன்னது தற்போது நிருபணமாகி உள்ளது என்று கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading