இந்தியா கூட்டணி வலுவாக உள்ளதால், நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் நாங்கள் அமர்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசு அதிகாரிகள் நியமன அவசர சட்டத்தை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
அமலாக்கத்துறை இயக்குநருக்கு 3 முறைக்கு மேல் பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறுகிறது. பதவி நீட்டிபுக்கான காலக்கெடு ஜூலை 31ஆம் தேதி தான் என நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் என்ன நடந்தது. மீண்டும் வலுக்கட்டாயமாக பதவி நீட்டிப்பு பெறப்பட்டுள்ளது. மணிப்பூர் பிரச்னை குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் மறுக்கிறார்.
![](https://i0.wp.com/news7tamil.live/wp-content/uploads/2023/08/postcard-12-3.jpg?resize=1400%2C787&ssl=1)
மிட்டாய் கொடுத்து குழந்தையை ஏமாற்றுவது போல, இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயல்கிறது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. டெல்லி அரசை முடக்க பாஜக அரசு நினைக்கிறது.
மத்தியில் உள்ள ஆளும் கூட்டணிக்கு எதிராக இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. 2024-ல் நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் நாங்கள் அமர்வோம். நாங்கள் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வருவீர்கள்.
இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.