நாமக்கல் அருகே வளையபட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் 300 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் நாமக்கல்
மாவட்டம் வளையபட்டி பகுதியில் சிப்காட் அமைய உள்ளது. இதற்கான நிலம்
கையகப்படுத்துவதற்காக வளையப்பட்டி, பரளி,அரூர், புதுப்பட்டி, லத்துவாடி,
உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இந்த பகுதிகளில் தான் அதிகளவில் சின்ன வெங்காயம்
சாகுபடி மற்றும் காய்கறிகள், மக்காச்சோளம் உள்ளிட்டவை விவசாயம்
செய்யப்படுகிறது. இப்பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டால் ஏராளமான விவசாய
நிலங்களும், விவசாயமும் பாதிக்கப்படும். சிப்காட் அமைக்க பொது மக்களின்
கருத்துக்களை கேட்காமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு சிப்காட்
அமைப்பதைக் கைவிட வேண்டும் எனக்கூறி வளையபட்டி பேருந்து நிறுத்தம் அருகே சுமார் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நூதன முறையில் முட்டி போட்டு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
—ரெ.வீரம்மாதேவி
சிப்காட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.