சென்னையில் இருந்து இலங்கை செல்ல வேண்டிய விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 9:40 மணிக்கு இலங்கை புறப்பட வேண்டிய அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் 3 மணி நேரத்திற்கு மேலாக புறப்படாமல் இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செல்ல 40-க்கும் மேற்பட்ட பயணிகள் தயாராக இருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
3 மணி நேரத்திற்கு மேலாகியும் தங்களுக்கு தண்ணீர் கூட வழங்கவில்லை என வேதனை தெரிவித்ததோடு, கனடா, நார்வே போன்ற நாடுகளில் இருந்து சென்னை வந்து காத்துக் கிடப்பதாக தெரிவித்தனர். இந்த நிலையில், முன்னறிவிப்பின்றி திடீரென விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து விமான நிலைய அதிகாரியிடம் கேட்டபோது, இலங்iகை செல்ல வேண்டிய விமானத்தின் துணை விமானியின் உடல்நிலை சரியில்லாததால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.