முக்கியச் செய்திகள் தமிழகம்

குழந்தையின் தலையில் சிக்கிய சில்வர் பாத்திரம் அகற்றம்

வாலாஜாபேட்டையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிக்கொண்ட சில்வர் பாத்திரத்தை தீயணைப்பு துறையினர் குழந்தைக்கு காயம் ஏற்படாத வகையில் பத்திரமாக அகற்றினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள விசாலாட்சி நகர் பகுதியை
சேர்ந்தவர் ஜோனத். இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார் . இவரது ஒன்றரை வயது மகன் ஜோவித், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சில்வர் பாத்திரம் தலையில் மாட்டிக்கொண்டது. இந்நிலையில் ஜோவித்தின் பெற்றோர் அவனை மீட்டு, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக கொண்டு சென்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அங்கிருந்த மருத்துவர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஒன்றரை வயது குழந்தையான ஜோவித்தின் தலையில் மாட்டிக்கொண்டிருந்த சில்வர் பாத்திரத்தை, குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெட்டி எடுத்தனர்.

பின்னர் குழந்தைக்கு முதலுதவி கொடுத்து, பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைத்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் தலையில் சில்வர் பாத்திரம் மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”ஸ்டாலினின் ஆட்சி விளம்பர ஆட்சி” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

EZHILARASAN D

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்; உதயநிதிக்கு எந்த துறை? ஆலோசனை தீவிரம்

G SaravanaKumar

பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்துக்கு 29ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Arivazhagan Chinnasamy