ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதுவரை 57 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் 23 வகையான வெளிநாட்டு நாய்களுக்குத் தடை!
இந்த நிலையில் தர்மஷாலா உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடைபெறும் 58 வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது.
பஞ்சாப் அணி இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்றுள்ளது. தனது எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் பஞ்சாப் அணி இருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் 11 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்றுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 15 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன.