இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 629 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு, நேற்றைய தினம் திடீரென 7 ஆயிரத்திற்கு சரிந்தது. நேற்று 7 ஆயிரத்து 178 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 629 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 61 ஆயிரத்து 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 629 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் கொரோனா தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை, ஒரே நாளில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 31 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா