This News is Fact Checked by Newschecker
ஹரியானாவின் முதலமைச்சர் நயாப் சிங் சைனி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி மேடையை பாஜகவினர் சூரையாடியதாக வீடியோ ஒன்று பகிரப்பட்டது. இந்த வீடியோவானது பழையது மற்றும் தேர்தலுக்கும் வீடியோவிற்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது.
ஹரியானாவில் ஒரு கிராமத்தில் முதலமைச்சர் நயாப் சிங் சைனி தலைமையில் நடக்க இருந்த நிகழ்விற்காக போடப்பட்ட மேடையை பாஜகவினர் சூறையாடுவதாக வீடியோ ஒன்று சமூக ஊடக தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது. இந்த வீடியோவிற்கு, “ஹரியானாவின் முதலமைச்சர் நயாப் சிங் சைனியின் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையை விவசாயிகள் சேதப்படுத்தினர்” என தலைப்பிடப்பட்டிருந்தது.
உண்மை சரிபார்ப்பு
இந்த வீடியோவை ஆய்வு செய்த NewsChecker, வீடியோவின் கீஃப்ரேம்களை கூகுள் லென்ஸ் மூலம் ஆராய்ந்ததில், இந்த வீடியோவின் முழுமையான பதிவு, ஜனவரி 12, 2021 தேதியன்று PagdiSinger என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து பகிரப்பட்டது தெரியவந்தது. தற்போது பகிரப்பட்டு வைரலாக்கப்படும் வீடியோ PagdiSinger பயனர் பகிர்ந்த வீடியோவின் ஒரு பகுதி எனவும் கண்டறியப்பட்டது.
மேலும், வைரலான அந்த வீடியோவை ஆய்வு செய்ததில், மேடையின் பின்புறத்தில் “கிசான் மகாபஞ்சாயத்” என எழுதப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த வார்த்தையினை கூகுளில் ஆராய்ந்ததில் “கிசான் மகாபஞ்சாயத் மேடை நாசமாக்கப்பட்டது” என்ற தலைப்புடன் பதிவுகளையும், செய்திகளையும் காணமுடிந்தது.
அதேபோல், ஜனவரி 10, 2021 அன்று ‘The Week’ என்ற பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டது கண்டறியப்பட்டது. அந்த செய்தியில், “கர்னால் நகரில், கைம்லா கிராமத்தில் நடைபெற இருந்த ‘கிசான் மகாபஞ்சாயத்’ எனும் கூட்டம் ஹரியானா முதலமைச்சர் (முன்னாள்) மனோகர் லால் கட்டார் தலைமையில் நடைபெற இருந்தது. ஆனால், மத்திய அரசின் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியதையடுத்து, மனோகர் லால் கட்டார் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்” என கூறப்பட்டிருந்தது.
இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள படத்தையும், வைரல் வீடியோவின் கீஃப்ரேம்களையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு, இந்த சம்பவம் சித்தரிக்கப்பட்டது என்ற முடிவிற்கு வரப்பட்டது.
மேலும் அதே தேதியில், ஜனவரி 10, 2021 தேதியன்று ‘The Tribune’ என்ற பக்கத்தில் தற்போதைய வைரல் வீடியோ போன்ற ஒரு பதிவு கண்டறியப்பட்டது. “மத்திய அரசின் விவசாயச் சட்டங்களின் நன்மைகளை முன்னிலைப்படுத்த ‘கிசான் மகாபஞ்சாயத்’ நிகழ்ச்சியில் ஹரியானா முதலமைச்சர் உரையாற்ற இருந்தார். இதனை எதிர்த்து போராடிய விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்த, காவல்துறை கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தண்ணீரும் பீய்ச்சியும் அடித்தனர். விவசாயிகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடைத் தாக்கியதுடன் விழா மேடையையும் சேதப்படுத்தினர். இதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது” என அந்த செய்தி பகிரப்பட்டது.
அதேபோல, ஜனவரி 10, 2021 தேதியன்று ‘NDTV’ வெளியிட்டுள்ள செய்தியில், “கர்னால் அருகே ஒரு கிராமத்தில் விவசாயிகளுடன் ஹரியானாவின் அப்போதைய முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் நடத்த இருந்த சந்திப்பு, அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாததால் ரத்து செய்யப்பட்டது. மேலும் அங்கு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களில் பலர் மேடையில் நாற்காலிகளை வீசியதையும், பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளை கிழித்ததையும் பகிரப்பட்டுள்ள வீடியோ காட்டுகிறது” என பகிரப்பட்டிருந்தது.
2021-ம் ஆண்டு ஹரியானாவின் அப்போதைய முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘கிசான் மகாபஞ்சாயத்’ நிகழ்ச்சி மேடையை விவசாயிகள் நாசமாக்கினர். இந்த வீடியோ, ஹரியானாவின் தற்போதைய முதலமைச்சர் நயாப் சிங் சைனி ஏற்பாடு செய்த நிகழ்வின் மீதான தாக்குதல் என தவறாக பகிரப்பட்டது என்று முடிவு செய்யப்பட்டது.
Note: This story was originally published by ‘Newschecker‘ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective….








