ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. 61 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் எந்த நான்கு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் என தீவிரமாக சென்றுகொண்டிருக்கிறது போட்டி.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இன்று 61வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 47 ரன்கள் எடுத்தார்.
சென்னை சார்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே இரண்டு விக்கெட்டுகளும், சிம்ரஜித் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ருதுராஜ் 42 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது. 19 வது ஓவரில் வெற்றிக்கான கடைசி பந்தில் பௌண்டரி அடித்தார் சமீர் ரிஷ்வி. ராஜஸ்தான் சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், யுவேந்திர சகல், நந்த்ரே பெர்கர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.