பல்லடம் அருகே காதலனால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளம்பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த பனப்பாளையம் அருகே இளம்பெண் ஒருவர், தலையில் காயங்களுடன் உடல் முழுவதும் எரிந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சாலையோரம் கிடந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இளம்பெண்ணை அவரது காதலனே தீ வைத்து எரித்தது தெரியவந்தது.
திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன் லோகேஷ், இளம்பெண்ணின் தலையில் தாக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது.
இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது காதலன் லோகேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.