மேற்கு வங்கம் மாநிலத்தை உலுக்கிய சந்தேஷ்காலி வழக்கில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிரான புகார் அளித்த பெண், தனது புகாரை திரும்ப பெற்றுள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலத்தை உலுக்கிய சந்தேஷ்காலி பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார், தற்போது மக்களவைத் தேர்தல் பிரச்சார மேடைகளில் சர்ச்சையாகி உள்ளது. திரிணாமூல் கட்சினருக்கு எதிராக சந்தேஷ்காலியை சேர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு புகார்களை தொடுத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே புகார் தொடுத்த 3 பெண்களில் ஒருவர், காவல்நிலையத்திற்கு சென்று தனது புகாரை திரும்ப பெற்றுள்ளார். மேலும், பாஜக மகிளா மோர்ச்சா நிர்வாகிகள் தன்னை மிரட்டி, திரிணாமூல் கட்சியினருக்கு எதிராக புகார் கொடுக்க வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : “யூ டியூப் சேனல்கள் கட்டுப்பாடு இல்லாமல் ஒழுங்கற்று செயல்படுகின்றன” – நீதிபதி குற்றச்சாட்டு!
பிரதமரின் ஆவாஸ் யோஜனா உள்ளிட்ட நலத்திட்டங்களில் ஆதாயம் தருவதாக கூறி வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிய பாஜகவினர், பின்னர் அதனை தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். மேலும், தனது இந்த முடிவால் பாஜகவினரால் தனக்கு ஏற்பட வாய்ப்புள்ள அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு கோரி தனியாக ஒரு புகாரையும் அப்பெண் பதிவு செய்துள்ளார்.
மேற்கு வங்க அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஷஷி பஞ்சா, ’தங்கள் பொய்யான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை திரும்பப் பெறச் சென்ற பெண்கள், உள்ளூர் பாஜக தலைவர்களால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தப்பட்டதாகவும்’ குற்றம் சாட்டினார்.
இதையும் படியுங்கள் : “கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளாக ஏன் விரலைக் கூட அசைக்கவில்லை?“ – பாஜகவை கடுமையாக சாடிய திமுக எம்.பி. வில்சன்!
திரிணாமூல் காங்கிரஸ் எம்பி சகரிகா கோஷ் கூறுகையில், “மோசடியான பலாத்கார புகார்களை பதிவு செய்ய வற்புறுத்தப்பட்ட விதம் குறித்து உண்மையை கூறிய சந்தேஷ்காலி பெண்களை பாஜக மிரட்டுவது அருவருப்பானது” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் திரிணாமூல் கட்சியினர் ஏற்பாடு செய்த ஸ்டிங் ஆபரேஷனில், பாஜக உள்ளூர் தலைவர் ஒருவரே தங்கள் கட்சியின் நடவடிக்கைகள் அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து சந்தேஷ்காலி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க திரிணாமூல் கட்சி முடிவு செய்துள்ளது.