விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தற்போது தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் கடந்த 30ம் தேதி காலை
உத்தராகண்ட் மாநிலத்திலிருந்து டெல்லிக்கு காரில் வந்து கொண்டிருந்த போது உத்தரகண்ட் – அரியானா தேசிய நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி, சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதி பயங்கர விபத்திற்கு உள்ளானதில் கார் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் ரிஷப் பண்டின் கால், முதுகு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விபத்தை நேரில் பார்த்த அரசு பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் அவரை மீட்டு ரூர்கியிலுள்ள மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்ன மேல்சிகிக்சைக்காக அவர் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்கை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு அவர் நெற்றியில் உள்ள காயத்திற்கு பிளாஸ்ட் சர்ஜரி செய்யப்பட்டது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மருத்துவக் குழு பரிந்துரையின் பேரில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று மாலை 3 நாட்கள் கழித்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டார். இருப்பினும் அவரது காயங்களுக்கான சிகிச்சை தொடர்ந்து கொண்டிருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.