கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெறவுள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டு, மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டிருந்து. ஆனால் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருவதால் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெறவுள்ளது. நாளை தலைமைச்செயலகத்தில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர், டிஜிபி, மருத்துவத்துறையின் உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஏப்ரல் 27 ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.