உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், ஜனவரி 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டியை திட்டமிட்டப்படி நடத்த முடியவில்லை என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனவே, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை 17-ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது என குறிப்பிட்டார்.
மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை அந்தந்த ஊர் மக்கள் மட்டுமே நேரில் பார்வையிட முடியும் என்றும் மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் தெரிவித்தார். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டுக்கு இன்று மாலை 3 மணிக்கு முன்பதிவு தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனவரி 17ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. https://t.co/WciCN2AH8n | #Alanganallur | #Jallikattu | #News7tamil | #News7tamilUpdates pic.twitter.com/2kDSjTNTqu
— News7 Tamil (@news7tamil) January 11, 2022