நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளதாக , முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எப்போது அறிவித்தாலும் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தராமல் தமிழை வைத்து திமுக பிழைப்பு நடத்தி வருவதாகக் கூறிய அவர், வள்ளுவர் பிறந்த நாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தேதியை மாற்ற திமுக அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. பாரம்பரியம் பாரம்பரியமாக கடைபிடித்து வரும் நடைமுறையை மாற்றுவதற்காக மக்கள் யாரும் திமுகவிற்கு ஓட்டுப் போடவில்லை என சாடினார்.
இளைஞர்கள் தடம் மாறிப் போவதற்கு தமிழ்நாடு போதை மாநிலமாக மாறி வருவதே காரணம் என்ற அவர் மாநிலத்தின் தலைநகரான சென்னையில் சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு படை அமைத்து தமிழகத்தில் போதை பொருள் விநியோகத்தை தடுத்து இளைஞர்களை காக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.