தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு: இறுதிநாளில் ஏராளமானோர் மனுதாக்கல்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில்,  முக்கிய வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.  தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில்,  முக்கிய வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். 

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து, வேட்புமனு தாக்கலுக்காக 6 நாள்கள் வழங்கப்பட்டன.  அந்த வகையில், இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களில் பெரும்பாலானோர் நேற்று முன்தினம் (மார்ச் 25) மனுக்களை அளித்தனர். அதனால், ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் எண்ணிக்கை 402-ஆக இருந்தது.

அதில், ஆண்கள் சார்பில் 341 மனுக்களும், பெண்கள் தரப்பில் 61 மனுக்களும் தாக்கலாகின. வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளான மார்ச் 20-ம் தேதி 22 மனுக்களும், 21-ம் தேதி 9 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. 22-ம் தேதி 47 மனுக்களும், 25-ஆம் தேதி 402 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு - News7 Tamilமக்களவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (மார்ச் 28) நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 30  என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். 

இந்நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், அனைத்து தொகுதிகளிலும் உள்ள நட்சத்திர வேட்பாளர்கள் மற்றும் முக்கிய வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டிவருகின்றனர். அதன் விவரங்கள் பின்வருமாறு:

திமுக மற்றும் கூட்டணி

மத்திய சென்னையில் தயாநிதி மாறன் வேட்புமனு தாக்கல்

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார்.

Image

கரூரில் ஜோதிமணி வேட்புமனு தாக்கல்

கரூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாநிலங்களவை திமுக எம்பி அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.

Image

சிதம்பரத்தில் திருமாவளவன் வேட்புமனு தாக்கல்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விசிக வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  அப்போது அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Image

தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் வேட்புமனு தாக்கல்

தேனி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வேட்புமனு தாக்கல் செய்தார்.  அப்போது அமைச்சர்கள் ஐ.பெரியசாமி,  மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Image

நீலகிரியில் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்

நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Image

கன்னியாகுமரியில் விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மாவட்ட தேர்தல் அதிகாரி ஸ்ரீதரிடன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் மனோ தங்கராஜ், காங். சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார், மேயர் மகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்ல சுவாமி ஆகியோர் உடனிருந்தனர்

Image

புதுச்சேரியில் வைத்திலிங்கம் வேட்புமனு தாக்கல்

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்தங்கனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா, காங்கிரஸ் – திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தஞ்சாவூரில் முரசொலி வேட்புமனு தாக்கல்

தஞ்சை மக்களவைத் தொகுதியில் புதிய வேட்பாளர் முரசொலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில் வேட்புமனு தாக்கல்

திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

நெல்லையில் ராபர்ட் புரூஸ் வேட்புமனு

நெல்லை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் முன்னாள் அமைச்சர் பி பி எம் மைதீன் கான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் முன்னிலையில் நெல்லை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வழக்கறிஞர் ஆர்.சுதா வேட்புமனு தாக்கல்

மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் ஆர்.சுதா, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதியிடம் வேட்பமனு தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் மெய்யநாதன் உடனிருந்தனர்,

 

Image

பாஜக கூட்டணி

கோவையில் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  அவருடன் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும்,  கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Image

பொள்ளாச்சியில் வசந்தராஜன் வேட்புமனு தாக்கல் 

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் வசந்தராஜன், தனக்கு பயிற்றுவித்த பள்ளி ஆசிரியருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

Image

அரக்கோணத்தில் கே.பாலு வேட்புமனு தாக்கல்

அரக்கோணம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் கே.பாலு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாமக மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளுடன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திருவண்ணாமலையில் அஸ்வத்தாமன் வேட்புமனு
திருவண்ணாமலை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அஸ்வத்தாமன் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். 
தேனி தொகுதியில் டிடிவி தினகன் வேட்புமனு
பாஜக கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிடி தினகரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.  அப்போது அதிமுக எம்பி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.