மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றாததால் , இன்றைய தினத்தை “துரோக” தினமாக அனுசரிக்க உள்ளதாக பாரதிய கிசான் சங்கம் அனுசரித்துள்ளது.
விவசாயிகளுக்கான மூன்று வேளாண் சட்டங்கள், மற்றும் குறைந்த பட்ச ஆதரவு விலைச் சட்டத்திற்கும் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குடியரசுத் தலைவர் அனுமதி வழங்கினார். விவசாயிகள் மத்தியில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனையொட்டி பஞ்சாப், ஹரியானா உட்பட பல மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் செய்யத் தொடங்கினா். டெல்லியின் எல்லைப்பகுதி மற்றும் போராட்டம் நடந்த டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் சுமார் 700 விவசாயிகள் உயிர் தியாகம் செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மத்திய அரசுடன் 11 சுற்றுக்கள் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் அந்தப் பேச்சு வார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இயற்கைச் சீற்றங்களை கூட பொருட்படுத்தாமல் போராட்டஙகள் தொடர்ந்தது. கிட்டதட்ட ஓராண்டாக தொடர்ச்சியாக நடந்த விவசாயிகள் போராட்டத்தால் மத்திய அரசு 3 விவசாயிகள் சட்டங்களை திரும்ப பெருவதாக அறிவித்தது. கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 19 ம் தேதி 3 வேளாண் சட்டங்களையும் திருப்பி பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர்.
சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டாலும் குறைந்த பட்ச ஆதரவு விலை இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் பாரதிய கிசான் யூனியன் சங்க தலைவரும், விவசாயிகள் ஒருங்கிணைப்பு கமிட்டியின் செய்தி தொடர்பாளாருமான ராஜேஷ் திகைத் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் ‘‘கடந்த டிச.9ம் தேதி ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதி (குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகள்) கடிதத்தின் அடிப்படையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அந்த வாக்குறுதிகளை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. இதை கண்டித்து இன்று நாடு முழுவதும் துரோக தினம் கடைப்பிடிக்கப்போம்,’’ என்று கூறியுள்ளார்.