ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டம் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அரசாங்கத்தை வழிநடத்தும் மொழியாக அலுவல் மொழி இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இதன்மூலம் இந்தியின் முக்கியத்துவம் நிச்சயமாக அதிகரிக்கும்” என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல் ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என குறிப்பிட்ட அமித்ஷா, நாட்டின் ஒற்றுமைக்கு அலுவல் மொழியை முக்கிய அங்கமாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அது இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.மத்திய அமைச்சரவையின் 70 சதவிகித செயல்பாடுகள் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.