25 ஆண்டுகளுக்குப் பிறகு பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றப்படுவதாகவும், வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பொறியியல் பாடத்திட்டங்களை மாற்றுவது என்கிற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 25 ஆண்டுகளுக்குப் பிறகு பொறியியல் கல்லூரிகளில் பாடத்திட்டம் மாற்றப்படுகிறது என்றும், அதனை எவ்வாறு மாற்றவேண்டும் என்பது குறித்து தொழில்துறை வல்லுநர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: “நரிக்குறவர் இன மாணவிகளுக்கு வாக்குறுதி கொடுத்த முதலமைச்சர்”
மேலும், மாணவர்கள் படிக்கும் போதே, அவர்களின் திறனை கண்டறியும் வகையில் பாடத்திட்டங்களை அமைக்க வேண்டும் என்பதே நோக்கம் எனக்கூறிய அவர், புதிய பாடத்திட்டம் தொடர்பான பயிற்சி முதலில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, வரும் கல்வி ஆண்டில் இருந்து புதிய பாடத்திட்டம் முறை பின்பற்றப்படும் என்றும் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.