36 C
Chennai
June 17, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை – டெண்டர் வெளியிட்டது மத்திய அரசு!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான டெண்டரை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அதன் பிறகு மருத்துவமனை கட்டுவதற்கான எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டுவதற்கான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளுக்கான டெண்டரை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் மருத்துவமனையை கட்டுவதற்குத் தகுதியுடைய ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை 33 மாதங்களில் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 2026 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading