34.4 C
Chennai
May 14, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

மீண்டுமா? வங்கிக்கணக்கில் ரூ.753 கோடி – அதிர்ச்சியில் மருந்தக ஊழியர்!

சென்னையைச் சேர்ந்த முகமது இத்ரிஸ் என்பவரது வங்கிக் கணக்கில் ரூ.753 கோடி இருப்பு இருப்பதாக வந்த குறுஞ்செய்தியால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது இத்ரீஸ். இவர் சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் 10 ஆண்டுகளாக தங்கி அதே பகுதியில் உள்ள மருந்தகத்தில் பணியாற்றி வருகிறார். மாதம் 15 ஆயிரம் சம்பளத்திற்கு அவர் பணியாற்றி வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்று காலை முகமது இத்ரீஸ் வைத்துள்ள கோடக் மஹிந்திரா வங்கி கணக்கிற்கு ரூ.753 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முகமது இத்ரீஸ், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு கேட்டார்.

அவரது விவரங்களை பெற்றுக் கொண்டு வங்கி தரப்பில் முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் சில மணி நேரத்தில் முகமதின் வங்கி கணக்கை சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் முடக்கினர். இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். ரூ. 3 ஆயிரம் மட்டுமே வங்கி கணக்கில் வைத்திருந்த ஊழியர் முகமதிற்கு 753 கோடி ரூபாய் பணம் எப்படி வந்தது என தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

கோடக் வங்கி அண்ணாசாலை கிளையில் தனக்கு கணக்கு இருப்பதாகவும், நேற்று 2000ஆயிரம் ரூபாயை தனது நண்பரின் வாங்கி கணக்கிற்கு அனுப்பி விட்டு, இன்று காலை பார்த்த போது 753 கோடி ரூபாய் வங்கி கணக்கில் வந்ததாகவும், அதன் பின்னர் உடனடியாக தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதாகவும் முகமது இத்ரீஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து முறையான விளக்கத்தை வங்கி அதிகாரிகள் மற்றும் தெரிவிக்காததால் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.

ஏற்கெனவே, வாடிக்கையாளர் ஒருவர் கணக்கில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ரூ.9000 கோடி வரவு வைத்ததும், தஞ்சை அருகே கோட்டக் மகேந்திரா வங்கி வாடிக்கையாளர் ஒருவர் கணக்கில் ரூ.756 கோடி இருப்பு இருப்பதாகவும் குறுஞ்செய்திகள் வெளியான பரபரப்பு அடங்குவதற்குள், இன்று சென்னையில் மருந்தக ஊழியர் கணக்கில் கோடக் வங்கி ரூ.753 கோடி இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading