உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் ‘குர்குரே’ வாங்கி வருவதற்கு கணவர் மறந்த நிலையில், திருமணமான ஒரே வருடத்தில் அவரது மனைவி விவாகரத்து கோரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே நாம் எல்லோரும் சப்பாட்டை விட நொறுக்கு தீனிகளை விரும்பி உண்ணுவோம். அந்த காலத்தில் சாப்பிடப்பட்ட முறுக்கு, கடலைமிட்டாய், அதிரசம் போன்ற நொறுக்கு தீனிகள் சத்தானவை. ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் குர்குரே, வேஃபர், சாக்லேட் போன்ற நொறுக்கு தீனிகளுக்கு நாம் அனைவரும் அடிமையாகி உள்ளோம். அந்த வகையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் திருமணமாகிய பெண் ஒருவர் குர்குரேவுக்கு அடிமையாகி உள்ளார். தினமும் தனது கணவரிடம் 5 ரூபாய் குர்குரே பாக்கெட் கேட்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
காலப்போக்கில் இருவருக்கும் இடையே இது பிரச்னைக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில், திடீரென ஒருநாள் அவளது கணவர் குர்குரே வாங்கி வர மறந்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண் அவளுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் விவாகரத்து கோரியுள்ளார்.
கடந்த ஆண்டு இந்த தம்பதியினர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். நாட்கள் செல்ல செல்ல தனது மனைவியின் ஜங்க்புட் மோகம் கவலையை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். நாளடைவில் இதில் கோபமடைந்த கணவர் அவரது மனைவியை அடித்துள்ளார். இதனால் தனது பெற்றோர் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார்.







