தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 க்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு சட்டசபையில் 2023 – 24ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை காலை 10:00 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவை காலை 10 மணிக்கு கூடியதும் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டபேரவையில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டினை தாக்கல் செய்து பட்ஜெட் உரையை வாசிப்பார்.
இதனையும் படியுங்கள்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் – தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி சந்திப்பு
இதனையடுத்து சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த அலுவல் கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது., என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து முடிவு செய்யப்படும். குறிப்பாக வேளாண் பட்ஜெட் உள்ளிட்ட அனைத்து அலுவல்கள் குறித்தும் அந்தக் கூட்டத்தில்தான் முடிவு செய்யப்படும்.
இதன் பின்னர் மானிய கோரிக்கையின் தேதிகள் தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு வெளியிடுவார். இந்த பட்ஜெட்டில் முக்கியமான அம்சமாக பெண்களுக்கான உரிமைத் தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, அதனால் பயனடையும் பெண்கள் பற்றிய விபரங்கள் உள்ளிட்டவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– யாழன்