அதிமுக, திமுக மற்றும் அமமுகவிற்கு இடையே நடக்கும் யுத்தம்தான் இந்த சட்டப்பேரைத் தேர்தல் என விழுப்புரம் தேர்தல் பரப்புரையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அவர், திமுக, அதிமுகவை தாக்கி பேச அமமுக மட்டுமே தகுதி உள்ளதாகக் கூறிய டிடிவி தினகரன், அதிமுக, திமுக மற்றும் அமமுகவிற்கு இடையே நடக்கும் யுத்தம்தான் இந்த தேர்தல் எனக் கூறினார்.
அமமுக ஆட்சிக்கு வந்தால், விழுப்புரத்தில் நகை தொழிலாளர்களுக்கு என சிறப்பு நகை தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளையும் பொதுமக்களிடம் டிடிவி தினகரன் அளித்தார். மேலும் நேர்மையான, உண்மையான ஆட்சியை அமமுக அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.