முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

பணபலத்தை நம்பியே அதிமுக தேர்தலில் போட்டியிகிறது : டிடிவி தினகரன் !

பணபலத்தை நம்பியே அதிமுக தேர்தலில் போட்டியிடுவதாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய டிடிவி தினகரன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களால் நடத்தப்படும் கட்சி அமமுக என கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழகம் 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது எனவும், அதிமுக ஆட்சியில் எந்தவித வளர்ச்சி திட்டங்களும் மேற்கொள்ளவில்லை என்றும், நான்கு வருடமாக ஆட்சியில் இருந்தவர்கள் வேலை வாய்ப்பை உருவாக்கி தராமல் தற்போது வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவோம் என்று ஏமாற்றப் பார்க்கிறார்கள் என டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டினார்.

மேலும்,திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் செல்வங்களை பறிகொடுக்கும் சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“நாட்டின் சொத்துக்களை பிரதமர் விற்றுவிட்டார்”-ராகுல்காந்தி

Halley Karthik

இமாச்சலபிரதேச முதலமைச்சராக சுக்விந்தர்சிங் சுக்கு அறிவிப்பு

G SaravanaKumar

எதிர்க்கட்சி துணைத் தலைவர் மாற்றம்; சபாநாயகர் அப்பாவு பதில்

Arivazhagan Chinnasamy