30.2 C
Chennai
June 29, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

வரலாற்று சிறப்புமிக்க வேளாண் நிதி நிலை அறிக்கை – காங்கிரஸ் வரவேற்பு!

வரலாற்று சிறப்புமிக்க வேளாண் நிதி நிலை அறிக்கையை திமுக அரசு வெளியிட்டுள்ளதாக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (பிப். 19) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதன்பின்னர் வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

தொடர்ந்து, இன்று (பிப். 20) 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு தாக்கல் செய்து பேசினார்.

இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில்,  வேளாண் பட்ஜெட் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை என்றாலும் திறமையான கையாண்டு இருக்கும் நிலையில், வரலாற்று சிறப்புமிக்க நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஓர வஞ்சனையுடன் செயல்படுகிறது. இன்னும் தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்கவில்லை.

கரும்பு விவசாயிகள் முதல் தவணை கூடுதலாக ரூ.215 கொடுத்துள்ளனர். கொப்பரை தேங்காய் அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் வாங்க வேண்டும் என்பது தான் காங்கிரஸ் கோரிக்கை. மீண்டும் விவசாயிகள் கோரிக்கையை காங்கிரஸ் வலியுறுத்துகிறது.

நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் கொடுப்பது குறித்து விவசாயிகள் கோரிக்கைக்கு, நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வாதம் தொடர்ந்து நடைபெறும். விவசாயிகளின் கோரிக்கையை காங்கிரஸ் முன் வைக்க உள்ளது. மோடி அரசு வந்ததில் இருந்து விவசாயிகளை வஞ்சிக்கிறது.

விவசாயிகளிடம் எதிர்க்கட்சிகளிடம் ஆலோசிக்காமல் இரவோடு இரவாக மூன்று புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தனர். எதற்கு இதனை கொண்டு வந்தார்கள் எதற்கு திரும்பி பெற்றார்கள் என்று அவர்களுக்கும் தெரியவில்லை, நமக்கும் தெரியவில்லை. ஆனால் பாதிப்பு விவசாயிகளுக்கு தான். மத்திய அரசு வேளாண் குடிமக்களை பாதுகாக்க நிதி வழங்க வேண்டும். கள் இறக்குமதி தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading