31 C
Chennai
December 5, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

வைக்கம் போராட்டத்தின் 100வது ஆண்டுவிழா- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் அழைப்பு

வைக்கம் போராட்டத்தின் 100வது ஆண்டுவிழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என கேரள முதல்வர் பிணராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

தோள்சீலை போராட்டம் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன் தெரிவித்ததாவது..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

”கேரளத்தில் மார் மறைக்கும் சமரமும், தமிழ்நாட்டின் தோள்சீலை போராட்டமும்
ஒன்றுதான். விலக்கி நிறுத்தப்பட்ட பெரிய அளவிலான மக்கள் நம் நாட்டில் உண்டு.
நிறைய சமூகத்தில் பெண்களுக்கு மார்பை மறைக்க முடியாத நிலை இருந்தது. மார்பை
மறைக்க முன்னெடுக்கப்பட்ட போராட்டம்தான் மார் மறைக்கல் சமரம்.

2 நூற்றாண்டுக்கு முன்பு திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூர் இனி சனாதன தர்ம அரசாக இருக்கும் என அறிவித்தார். மனிதனுக்கு எதிரான செயல்பாடுகள், வரிகள் மக்களிடம் திணிக்கப்பட்டது. மனித உடல் பாகத்துக்கு வரி செலுத்தும் நிலை ஏற்பட்டது மிகவும் மோசமானது. பெண்கள் மார்பு மறைக்கக்கூடாது என சட்டம் மூலம் கொண்டுவந்தார்கள். அதை தடுக்கும் விதமாக நடந்ததுதான் தோள்சீலை போராட்டம்.

சனாதன தர்மத்தின் நாடு என்று அறிவித்த மார்த்தாண்ட வர்மா செய்ததை
பற்றி சொன்னார்கள். இதை சனாதன தர்மம் என்ற பெயரில் சங்க பரிவார் பழைய
மன்னராட்சியை கொண்டுவரப் பார்க்கிறது. ஜனநாயகம் இவர்களுக்கு அலர்ஜி.
தாங்கள் உடைக்க முடியாத சக்தி என்ற பா.ஜ.க வாதம் தேசிய அரசியலில் உடைவதை
இன்று காண முடிகிறது.

பா.ஜ.க-வுக்கு எதிராக பீகாரில் நிதீஸ் கட்சி நிற்கிறது. இது பீகாரில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். பா.ஜ.க வின் மக்கள் விரோத போக்கால் ஹரியானாவில் தேவிலாலின் நூற்றாண்டு விழாவில் எதிர்கட்சிகள் பேரணி நடத்தின. 2024-ல் பா.ஜ.க-வின் மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க வேண்டும் என்ற கோஷம் அதில் உயர்ந்தது. சிவசேனாவின் ஒரு பகுதி மட்டுமே பி.ஜே.பி உடன் உள்ளது. மகராஷ்டிரா உள்ளிட்ட இடைத்தேர்தலில்களில் பா.ஜ.க-வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

11 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த டெல்லி மாநகராட்சி பா.ஜ.க கையைவிட்டு போனது. இதெல்லாம் நாட்டில் வளர்ந்துவரும் அரசியலின் சரியான அறிகுறிகள். பா.ஜ.க-வின் துன்பத்தை மக்கள் அறிந்துகொள்கிறார்கள்.. அவை மக்கள் மத்தியில் எதிரொலிக்காமல் இருக்க சங்கபரிவார் பிரிவினை அஜண்டாவை புகுத்துகிறார்கள். காசியும், மதுராவும் அடுத்ததாக பிடித்து எடுக்கலாம் என கூறுகிறார்கள். பசியும் அதனால் ஏற்படும் சமூக மாற்றங்களையும் கண்டுகொள்ளாமல் சங்கபரிவார் அமைப்பினர் கண்டுகொள்வதில்லை.

திரிபுராவில் பா.ஜ.க வென்றதாக நாம் நினைக்கிறோம். கடந்த முறை 50 சதவீதம் ஓட்டு வாங்கியவர்களுக்கு இந்த முறை 10 சதவீதம் ஓட்டு குறைந்துள்ளது. சில கட்சிகள் ஓட்டு பிரிக்காமல் இருந்தால் அங்கு வேறு மாதிரி ஆகியிருக்கும்.

ஒரு மொழி, ஒரு நாடு, ஒரு மதம் என்று இந்தியாவை மாற்ற பார்க்கிறார்கள். தி.மு.க
மொழி பாதுகாப்பு போராட்டம் நடத்தியது. இந்தி திணிப்புக்காக அவர்கள்
முயல்கிறார்கள். மத்திய ஏஜென்சிகள் மூலம் அரசியல் செய்வது நமக்கு தெரிகிறது.
அதை இன்னும் அதிகரிக்கப்பார்க்கிறார்கள். பெருமுதலாளித்துவாதிகள் அரசியல் செய்கிறார்கள். எல்.ஐ.சி-யின் 70 ஆயிரம் கோடியை ஒருவர் விழுங்கியுள்ளார்.

அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற ஏஜென்சிகளை அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். சி.பி.ஐ மீதுள்ள நம்பிக்கை தகர்ந்துள்ளது. இந்துத்துவ தந்திரம் ஆபத்தை உண்டாக்கும். மொழி பாதுகாப்பு முதல் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் என அனைத்திற்கும்  நாம் போராட்டத்தை நடத்த வேண்டும். பா.ஜ.க-வை எதிர்க்க நாம்
அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். மக்கள் உரிமை நாட்டின் எதிர்காலத்தை
நிர்ணயிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இங்கு தமிழக முதல்வருக்கு ஒரு அழைப்பை
கொடுக்க விரும்புகிறேன். வைக்கம் போராட்டத்தின் 100-ம் ஆண்டு நிகழ்ச்சியை
நாங்கள் நடத்தப்போகிறோம். அதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் வரவேண்டும் என
அழைக்கிறேன்” என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy