தமிழ்நாட்டில் மதியம் 3 மணி வரை 51.41% வாக்கு பதிவாகின.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று (ஏப். 19) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மதியம் 3 மணி வரை 51.41% வாக்கு பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக தருமபுரியில் 57.86% பதிவாகி உள்ளன. தொகுதிவாரியாக வாக்குப்பதிவு நிலவரம் வருமாறு:
தொகுதி சதவீதம்
தர்மபுரி -57.86 %
கள்ளக்குறிச்சி -57.34%
நாமக்கல் -57.67%
ஆரணி -56.73%
கரூர் -56.65%
பெரம்பலூர் -56.34%
சேலம் -55.53%
விழுப்புரம் -54.43%
விருதுநகர் -53.45%
ஈரோடு -54.13%
சிதம்பரம் -55.23%
திண்டுக்கல் -53.43%
அரக்கோணம் -53.83%
கிருஷ்ணகிரி -53.37%
திருவண்ணாமலை -53.72%
நாகப்பட்டினம் -52.72%
பொள்ளாச்சி -53.14%
வேலூர் -53.17%
தேனி – 52.52%
திருப்பூர் -51.07%
தஞ்சாவூர் -52.02%
மயிலாடுதுறை -52.00%
கடலூர் -52.13%
கன்னியாகுமரி -51.12%
சிவகங்கை -51.79%
தென்காசி -51.45%
நீலகிரி -52.49%
திருவள்ளூர் -49.82%
திருச்சிராப்பள்ளி – 50.71%
ராமநாதபுரம் -51.16%
கோயம்புத்தூர் -50.33%
காஞ்சிபுரம் -49.94%
தூத்துக்குடி -50.41%
திருநெல்வேலி – 48.58%
ஸ்ரீபெரும்புதூர் -45.96%
மதுரை -47.38%
சென்னை வடக்கு -44.84%
சென்னை தெற்கு -42.10%
சென்னை சென்ட்ரல் -41.47%