சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் நீர்வளத்துறையின் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை ஆலந்தூர் மண்டலம் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 447.03 கோடி மதிப்பீட்டில் 120.55 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி மூலமாக பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதற்கட்டமாக GST சாலை பழவந்தாங்கல் சுரங்க பாதை, அம்மன் கோயில் தெரு, வேம்புலி அம்மன் கோயில் தெரு, நங்கநல்லூர் நான்காவது மெயின் ரோடு, மற்றும் ஐந்தாவது மெயின் ரோடு, ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் மற்றும் நீர்வளத்துறையின் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பின்றியும், போக்குவரத்திற்கு இடையூறின்றி செல்லும் வகையிலும் , மழைநீரானது சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்காமல் வடிந்து செல்லும் வகையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில் பல்வேறு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவடையும் நிலையில் இருப்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மெயின் ரோடு போரூர், மெயின் ரோடு குன்றத்தூர், பிரதான சாலை பூந்தமல்லி மெயின் ரோடு, அசோக் பில்லர் உள்ளிட்ட சாலை ஆகிய பகுதிகளையும் இதனை தொடர்ந்து ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து போரூர் முக்கிய சாலையிலும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.