2024 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று விழுப்புரத்தில் தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற, பா.ஜ.க-வின் சக்திகேந்திர பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த நிலையில் இன்று திருச்சி சென்றுள்ள அண்ணாமலை அங்கு சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அவர், அண்ணன் திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார், அவர் தைரியமாக வெளியே வரட்டும். 2024 மக்களவை தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் தான். கூட்டணிக் கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக திருமாவளவன் சொல்வது தவறானது என விமர்சனம் செய்தார் செய்தார்.
பின்னர் ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி குறித்து பேசிய அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, எப்போதுமே தேர்தலின் தீர்ப்பு வந்த பிறகு மக்கள் கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பை தலை வணங்கி ஏற்க வேண்டும். அது நம் அரசியலில் மிக முக்கியமானது. அப்படித்தான் அனைத்துத் தேர்தல்களையும் பா.ஜ.க பார்க்கிறது. அதன்படி நாக்கினால் ஈரோடு கிழக்கில் மக்கள் கொடுத்திருக்கும் தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி ஏற்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள் தான் இருக்கின்றன. ஏற்கெனவே நாங்கள் சொன்னதுபோல நிச்சயம் அது எங்களுக்கான தேர்தலாக மட்டும்தான் இருக்கும். எனவே ஈரோடு வெற்றி என்பது திமுக ஆட்சி பொறுப்பேற்று 23 மாதங்கள் செய்த சாதனைகளுக்கு மக்கள் கொடுத்த வெகுமதி அல்ல. அது எப்படி கிடைத்த வெற்றி என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும் என கூறினார்.
மேலும் ஒரு கூட்டணியை அரவணைப்பது எங்கள் கடமையல்ல. ஒரு கட்சி இன்னொரு கட்சியை எப்படி நடத்த வேண்டும் என கூறினால் அது ஜனநாயகமாக இருக்காது. 2021-க்கு முன்பு வரை எப்படி இருந்தது என்பது எனக்கு தெரியாது. நான் பா.ஜ.க வின் தலைவரான பின்பு மற்ற கட்சியின் பிரச்சனைகளில் பா.ஜ.க தலையிட கூடாது என்பதில் தெளிவாக உள்ளேன். அ.தி.மு.க வில் பிரிந்திருப்பவர்களை இணைப்பது எங்கள் வேலை அல்ல எனவும் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா