அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி எச்.எச்.வர்மாவின் பதவி உயர்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததுள்ளது.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த சூரத் தலைமை ஜூடிசியல் நீதிபதி உட்பட 68 கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கி அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து நீதிபதி எச். எச்.வர்மா உள்பட 68 பேரின் பதவி உயர்வையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதி வர்மா உட்பட குஜராத்தின் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் 68 பேரின் பதவி உயர்வை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் பதவி உயர்வு என்பது தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். ஆனால் குஜராத் அரசின் இந்த பதவி உயர்வு அறிப்பு சட்டவிரோதமானது. பதவி உயர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், பதவி உயர்வு அறிவிப்பிற்கு தடை விதித்தது மட்டுமின்றி, நீதித்துறை சார்ந்த 68 பேரின் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அவர்கள் அனைவரும் தங்களது பழைய பதவியிலேயே தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








