குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் – கரை திரும்பிய மீனவர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்றுடன் தொடரும் கடல் சீற்றத்தினால், ஆயிரக்கணக்கான பைபர் படகு மீனவர்களும் நாட்டு படகு மீனவர்களும் தொழிலை கைவிட்டு வேதனையுடன் கரை திரும்பினர். கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரை…

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்றுடன் தொடரும் கடல் சீற்றத்தினால், ஆயிரக்கணக்கான பைபர் படகு மீனவர்களும் நாட்டு படகு மீனவர்களும் தொழிலை கைவிட்டு வேதனையுடன் கரை திரும்பினர்.

கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரை பகுதியான அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்றுடன் தொடரும் கடல் சீற்றத்தால் குளச்சல், முட்டம், மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வரும் நிலையில்  கரையோர மீன்பிடி தொழிலுக்கு சென்ற நாட்டு படகு மீனவர்களும் கடல் சீற்றத்தால் மீன்பிடி தொழிலை கைவிட்டு கரை திரும்பினா். மேலும் கடல் சீற்றம் தொடர்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

—-ரூபி.காமராஜ்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.