”அரசுக்கும் மக்களுக்கும் இடைவெளி இல்லாமல் திட்டக்குழு செயல்படுகிறது “ என மாநில திட்டக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக் குழு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், குழுவின் முழுநேர, பகுதி நேர உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வேளாண் துறை கொள்கைகள், மின்சாரம், போக்குவரத்துத்துறை, சமூக நலத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மாநில திட்டக்குழு கூட்டத்தில் மகளிருக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது..
“சில முக்கிய கொள்கைகளை வகுக்கும் பணி திட்டக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் இடைவெளி ஏற்படாமல் திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது. கட்டணமில்லா பயணச் சலுகை மூலம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர் என்பது திட்டக்குழு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
நான் முதல்வன் திட்டம் மூலம் 13 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விடியல் பயண திட்டம் மூலம் மகளிருக்கு மாதம் ரூ.1000 சேமிப்பு கிடைக்கிறது. மகளிர் உரிமை தொகை பெற்ற பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்;