முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

கீழே கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைக்கும் ஜப்பானியர்கள்! ரூ.180 கோடியை உரியவர்களிடம் ஒப்படைத்த காவலர்கள்!

கீழே கிடந்த பணத்தை போலீசில் ஜப்பானியர்கள் ஒப்படைத்துள்ளனர். அப்படி   திரும்ப கிடைத்த  பணம் கிட்டத்தட்ட ரூ.180 கோடியை உரியவர்களிடம் காவல்துறை வழங்கியுள்ளது.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ காவல் துறை கடந்த புதன்கிழமையன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் காவல்துறையில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ள  மொத்த தொஅகி 250 கோடியாகும். இந்த மொத்தத் தொகையில் 180கோடிக்கு மேல் பணத்தை அந்தந்த உரிமையாளர்களுக்குத் திருப்பி தந்துள்ளதாக  ஜப்பான் காவல்துறை தெரிவித்துள்ளது. மீதமுள்ள உரிமை கோரப்படாத பணம் அரசு நிர்வாகத்திற்கு செல்வதாகவும்  என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஜப்பானின் சரக்கு மற்றும் சேவை சட்டம் ” யாரேனும் பணம் அல்லது பொருட்களை கீழே இருந்து  கண்டுபிடித்தால்  காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அப்படி திரும்ப ஒப்படைக்கும் நபர் பணத்தின் உரிமையாளரிடம் இருந்து  5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வெகுமதியாகப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் இந்த சட்டம் தெரிவித்துள்ளது.

இதனால் 2022 ஆம் ஆண்டில் மட்டும்  ஏறத்தாழ 3.43 மில்லியன் அளவு  தொலைந்து போன பொருட்கள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது 2021 ஆம் ஆண்டை விட 21.9 சதவீதம் அதிகமாகும் என்றும் காவல் துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனையும் படியுங்கள்: 40 மணி நேரம் தொடர்ந்து அலைச்சறுக்கு: ஆஸ்திரேலிய வீரருக்கு குவியும் பாராட்டுகள்!

காவல் துறையின் லாஸ்ட் அண்ட் ஃபவுண்ட் சென்டரின்  (Lost and Found Center) புள்ளிவிவரங்கள் 2015 மற்றும் 2019 க்கு இடைப்பட்ட காலத்தில்  தொலைந்து போன பொருட்களின் எண்ணிக்கை சுமார் 4 மில்லியனாக இருந்தது.

அடையாள அட்டைகள் மற்றும் இன்சூரன்ஸ் அட்டைகள் போன்ற ஆவணங்கள், சுமார் 7,30,000 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதேபோல சுமார் 3,90,000 தொலைந்து போன பயணிகள் பாஸ் மற்றும்  சான்றிதழ்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேர்தல் நேரத்தில் கொரோனா பணிகள் மேற்கொள்வதில் சிரமம் – ஆணையர் பிரகாஷ்

Gayathri Venkatesan

சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்; முதல்வர் பெருமிதம்

G SaravanaKumar

கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு வழக்கு- மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

Web Editor