முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

“வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”: முதல்வர் பழனிசாமி

வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் வலியுறுத்தியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள குமாரபாளையம் தொகுதியில், அமைச்சர் தங்கமணியை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, முந்தைய திமுக ஆட்சி ஒரு இருண்ட காலம், என்று முதலமைச்சர் விமர்சித்தார். மேலும், அதிமுக ஆட்சியில், தமிழகம் தற்போது மின்மிகை மாநிலமாக திகழ்கிறது என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட வெப்போடை பகுதியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவச வாஷிங் மிஷின் ,வருடத்திற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி வாக்கு சேகரித்தார். அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்ததாகவும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீட் தேர்வு முடிவுகள் – ஓர் அலசல்

Web Editor

வேளாண் சட்டங்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Saravana

ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு சாத்தியமா?

G SaravanaKumar