சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரையில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து தான் உலகக் கோப்பை தொடரை நடத்தியுள்ளது. இதற்கு முன்பு 1987, 1996, 2011-ம் ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்றிருக்கிறது. அப்போதெல்லாம் இணை அமைப்பாளராக மற்றொரு நாடும் இருக்கும். ஆனால் முதல் முறையாக இந்தியா தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மொத்தம் 48 நாள்கள் நடைபெறும் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியே, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியா, நாளை தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டிக்காக போலீஸ் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2000 போலீசார் வரையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் அக். 8, 13, 18, 23, 27 ஆகிய தேதிகளில் போட்டியைக் காண வரும் ரசிகர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.