28.6 C
Chennai
April 28, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றே தீருவோம் – ராமதாஸ் உறுதி

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை எப்பாடு பட்டாலும் வென்றே தீருவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி தெரிவித்துள்ளார்.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னிய சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்து அவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற உன்னத நோக்குடன் தான் பிரிந்து கிடந்த அமைப்புகளையெல்லாம் ஒன்று திரட்டி, வன்னியர் சங்கத்தை கட்டமைத்தோம் என தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

அதன் பலனாக வன்னியர் உள்ளிட்ட 108 சமுதாயத்தை உள்ளடக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை உருவாக்கி 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்ட போதிலும், போதிய பிரதிநிதித்துவம் வன்னியர்களுக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து, 2020-ம் ஆண்டு நடத்திய போராட்டத்திற்கு பிறகு 2021-ம் ஆண்டு 10.50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டு வந்தது.  பின்னர்  சில அமைப்புகள் தொடங்கிய வழக்கில் உள் இடஒதுக்கீடு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தேன். தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு மீண்டும் உயிர்கொடுக்க போராடியது.

உச்சநீதிமன்றமும் நமது மேல்முறையீட்டு மனுக்களை ஆய்வு செய்து, வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் முன்வைத்திருந்த 7 காரணங்களில் 6 காரணங்கள் தவறானவை என்று தீர்ப்பளித்தது. பின்னர் இந்த வழக்கு உச்சநீதிமன்றம் சென்று ஐந்தரை மாதங்களை கடந்துவிட்டது என சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், கடந்த 10 மாதங்களில் அறிவிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளிலும் வன்னியர் இட ஒதுக்கீடு இல்லை என்ற  கவலைக்குரல்கள் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

 

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எப்பாடுபட்டாவது வெகுவிரைவில் வென்றேடுத்தே தீருவோம். இந்த உணர்வுடன், நாளை (செப்டம்பர் 17) , நமது இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும். அனைவரும் அவரவர்களின் வீட்டு முன்பு இட ஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்ற பதாகையை அமைத்து வீர வணக்கம் செலுத்த வேண்டும் என டாக்டர் ராமதாஸ் தமது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading