30.5 C
Chennai
April 28, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்களுக்கே வெற்றி: அமைச்சர் செந்தில் பாலாஜி

ஈரோடு கிழக்கு தொகுதியில், பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் எங்களுத்தான் வெற்றி எனவும், எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறப்போகிறோம் என்பதை பொருத்திருந்து பாருங்கள எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் நிர்வாகிகள் நேர்காணல் இரண்டாம் நாள் நிகழ்ச்சி சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை செயலாளர்கள் கவுதம சிகாமணி மற்றும் எஸ் ஆர் பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்று நிர்வாகிகளை நேர்காணல் செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னதாக மேடையில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த அணியில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரை, முதலமைச்சர் பொறுப்பாளராக நியமித்துள்ளார். அடுத்த தலைமுறைக்கு இந்த கழகத்தை எடுத்து செல்லும் வகையில் யோசித்து அவர்களை நியமித்துள்ளதாக கூறினார். இந்த அணியில் பொறுப்பு பெரும் நிர்வாகிகள், அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் நம் அணி சார்பில் எவ்வளவு வாக்குகளை பெற்று தர வேண்டும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு பூத்துக்கு ஒரு கிரிக்கெட் அணியை நாம் சேர்த்தால் கிட்டத்தட்ட 7 லட்சம் பேரை கழகத்தில் சேர்த்து நாடாளுமன்ற தேர்தலுக்கு வலு சேர்க்க முடியும். திமுகவுக்கு 23 அணிகள் உள்ளன.சராசரியாக ஒவ்வொரு அணியும் 50 லட்சம் வாக்காளர்களை உறுப்பினர்களாக இணைத்தால், திமுகவை யாராலும் அசைக்க முடியாது, திமுக உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பணி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செஸ் போட்டிகளை நடத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற, பிறகு ஒட்டுமொத்தமாக தமிழநாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஒரு எழுச்சி வந்துள்ளது என புகழ்ந்து கூறினார்.

இதனையடுத்து நேர்காணல் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ஈரோடு கிழக்கு தொகுதியில், பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் எங்களுத்தான் வெற்றி எனவும், எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறப்போகிறோம் என்பதை பொருத்திருந்து பாருங்கள எனவும், மக்கள் முதலமைச்சர் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து மின்துறையின் செயல்பாடுகள் குறித்து பேசிய அமைச்சர், மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி இருப்பதாகவும், இந்த சட்ட மோசோதாவை முதலமைச்சர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார் எனவும் தெரிவித்தார்.

மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏப்ரல் மதம் வாட்ச் பில்களை தருவதாக கூறுகிறார் அண்ணாமலை. அதற்காக ஏன் ஏப்ரல் மதம் வரை காத்திருக்க வேண்டும். பில் இருந்தால் இப்போதே கொடுக்க வேண்டியதுதானே என்ற கேள்வியை எழுப்பியதோடு, இதிலிருந்தே தெரிகிறது அண்ணாமலை எந்த அளவிற்கு பச்சை பொய்யை சொல்லி வருகிறார் என்பது என அமைச்சர் கூறினார். அதேபோல் தைரியம் இருந்தால் தமிழ்நாடு பாஜகவின் உறுப்பினர் எண்ணிக்கையை வெளிப்படையாக சொல்ல வேண்டும், நோட்டாவோடு போட்டி போட கூடியவர்கள் தான் பாஜகவினர் எனவும் விமர்சித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

WPL 2023: மகுடம் சூடிய மும்பை இந்தியன்ஸ் Why is ‘Promise Day’ celebrated? Top 10 மலேசியா வாசுதேவன் பாடல்கள்… RBI அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் கரன்சியின் செயல்பாடுகள் MCU அடுத்து வெளியாக உள்ள 7 திரைப்படங்கள் iHeartRadio Music Awards 2024 – விருது வென்ற கே-பாப் கலைஞர்கள் Gen Z-ல் ஹிட் அடித்த அஜித் படங்கள் BAFTA விருதுகள் 2023 AI தொழில்நுட்பம் மூலம் துறவிகளாக மாறிய ஹாலிவுட் நடிகர்கள்!!