முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

”அனைத்து விவகாரங்களிலும் மத்திய அரசு தமிழ்நாட்டை பாரபட்சமாக பார்க்கிறது!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

அனைத்திலும் மத்திய அரசு தமிழகத்தை பாரபட்சமாக பார்க்கிறது. இதற்காக தான் இந்தியா கூட்டணி அமைந்துள்ளது , பாராளுமன்ற தேர்தலில் மக்கள் இதற்கான முடிவை எடுப்பார்கள் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை வால்டாக்ஸ் பகுதியில் தொடங்கி வைத்ததார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக 6 சட்டமன்ற தொகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் இன்று துவங்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதியில் 3 நாட்கள் முகாம் என 18 நாட்கள் நடைபெறும் . ஒட்டுமொத்த சென்னை தூய்மையாக இருப்பதற்கு தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக பார்க்கும் பணி தான் காரணம்.

தேசிய விளையாட்டு போட்டியில் குஜராத் மாநிலம் பதக்கம் எதுவும் பெறவில்லை
ஆனால் அந்த மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அனைத்திலும்
மத்திய அரசு தமிழகத்தை பாரபட்சமாக பார்க்கிறது. மாநில சுயாட்சியை பறிக்கும்
வேலையை பாஜக செய்கிறது. இதற்காக தான் இந்தியா கூட்டணி அமைந்துள்ளது
பாராளுமன்ற தேர்தலில் மக்கள் இதற்கான முடிவை எடுப்பார்கள்.

செம்மஞ்சேரியில் சர்வதேச மெகா ஸ்போட் சிட்டி பணிகள் 15 அல்லது 20 நாட்களில் தொடங்கப்பட்டு, உலக தரத்தில் அமைக்கப்படும்.  வெற்றி பெற்ற அனைத்து  விளையாட்டு வீரர்களும் ஸ்டார்கள் தான், அதனால் தான் என் துறையை முதல்வர் ஸ்டார் துறை என பாராட்டி உள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டம் அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை அத்துறை அமைச்சர் செய்கிறார். மாநில உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றார்.

காவிரி தொடர்பாக பாஜக உண்ணாவிர போராட்ட அறிவிப்பை எப்படி பார்க்கறீர்கள் என்ற கேள்விக்கு, அதை பார்க்கவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

சொந்த வீட்டில் நகை திருடி தோழிக்கு கொடுத்தவர் கைது

G SaravanaKumar

வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் தரிசனம்

Vandhana

நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading