சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது.
ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது. இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டிற்கான போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடத்த கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஆசிய விளையாட்டு போட்டி ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஹாங்சோவ் நகரில் இன்று தொடங்குகிறது. அக்டோபர் 8ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் ஆசியாவை சேர்ந்த சீனா, ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஈரான், கஜகஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்கின்றன. சுமார் 12 ஆயிரத்து 500 வீரர்கள் பங்கேற்கின்றனர். துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, நீச்சல், வில்வித்தை, தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், வாள்சண்டை, ஆக்கி, பேட்மிண்டன், , செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், படகுபந்தயம், கராத்தே உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன. தற்போது நடைபெறும் ஆசிய போட்டியில் இந்தியா சார்பில் 655 வீரர் வீராங்கனை பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் இந்த 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா சீனாவின் ஹாங்ஸுவில் உள்ள ஒலிம்பிக் விளையாட்டு மைதானத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலகலமாகத் தொடங்கியது. கடந்த முறை இந்தியா 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.