திமுக-வின் பகல் கனவு என்றைக்கும் பலிக்காது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஓன்றிணைந்து வெற்றி பெறும். அதற்கான வேலைகளை நான் பார்த்து வருகிறேன் என்று சசிகலா கூறியுள்ளார்.
அதிமுக-வின் 52 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சென்னை வேளச்சேரியில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 2500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்ச்சியில் சசிகலா பேசியதாவது:
51 ஆண்டுகளுக்கு முன்பாக மக்களுக்கு நல்லது செய்வதற்காக இதே நாளில் அதிமுக வை தோற்றுவித்தார் எம் ஜி ஆர். அவராளும் ஜெயலலிதாவாளும் தொடங்கப்பட்டு வளர்க்கப்பட்ட கட்சி, இப்பொழுது எதிர் கட்சியினர் பார்த்து நகைக்கும் வகையில் உள்ளது வருத்தம் தருகிறது.
திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியில் அமர்ந்து இருக்கிறார்கள். குற்றம் செய்பவர்கள் பெரும்பாலும் திமுக கட்சியினர்களாக இருப்பதால் காவல் துறையால் முறையாக செயல் பட முடியவில்லை. ஜெயலலிதாவால் கொடுக்க பட்ட மடிக்கணினி திட்டம் இன்று இந்த திமுக ஆட்சியில் கிடப்பில் போட பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டு காவேரியில் தண்ணீர் பெறாமல் விவசாயிகளை கஷ்ட படுத்துகிறது திமுக. கச்சத்தீவை மீட்போம் என கூறி ஏமாற்றுகிறது. மீனவர்களுக்கு வீடு கட்டி தர படும் என்று கூறி இன்ணும் கட்டி தர வில்லை. ரேசன் கடைகளில் சர்க்கரை 1 கிலோ ஏற்றி தருவதாக கூறி திமுக அரசு தரவில்லை. பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக கூறி குறைக்க வில்லை திமுக. நாள்தோறும் போராடும் நிலைக்கு மக்கள் தள்ள பட்டு விட்டனர் மக்கள்.
திமுக வின் பகல் கனவு என்றைக்கும் பலிக்காது வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஓன்றிணைந்து வெற்றி பெறும். அதற்கான வேலைகளை நான் பார்த்து வருகிறேன்.
இவ்வாறு சசிகலா பேசினார். இதனை அடுத்து மாற்று திறனாளி இந்திய கிரிக்கெட் அணியினர் சிலர் சசிகலாவிற்கு நினைவு பரிசு வழங்கினர். பின்னர் பொதுமக்கலுக்கு சசிகலா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாணவர்களுக்கான மடிக்கணினி , மாவு அரைக்கும் இயந்திரங்கள், கரும்புச்சாறு தயாரிக்கும் இயந்திரம், மருந்து அடிக்கும் இயந்திரம், சிறிய வின்ச் இயந்திரம் முதலிய பல்வேறு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.