இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.
உலகக் கோப்பையில் லக்னௌவில் நேற்று (அக்டோபர் 16) இலங்கை – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது இந்த சாதனையை அவர் படைத்தார். இரு அணிகளுக்கும் இடையிலான நேற்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த உலகக் கோப்பையில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் 21 பந்துகளில் 31 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் மூலம், இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் படைத்துள்ளார். உலகக் கோப்பையில் லக்னௌவில் நேற்று (அக்டோபர் 16) இலங்கை – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது இந்த சாதனையை அவர் படைத்தார்.