தமிழகம்செய்திகள்

ரயில்வே காவல்துறையில் கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி டிஜிபி சங்கர் ஜிவால் கடிதம்!

தமிழ்நாடு ரயில்வே காவல்துறையில் கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால்,  ரயில்வே துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். 

தமிழ்நாட்டில் தினசரி 578 ரயில்கள் இயக்கப்படுகின்றன.  இதில் சுமார் 24 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர்.  தமிழ்நாட்டில் சுமார் 1800 ரயில்வே போலீசார் பணியாற்றி வரும் நிலையில்,  ரயில்களின் எண்ணிக்கையும், ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள்: கனமழை பெய்யக்கூடிய 27 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்; ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்….

ரயிலில் வழிப்பறி,  செயின் பறிப்பு,  திருட்டு,  கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தல் போன்ற பலவிதமான குற்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன.  ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதலாக காவலர்கள் நியமிக்க அனுமதி கோரி தமிழ்நாட்டு காவல்துறை டிஜிபி ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு ரயில்வே காவல்துறையில் ரயில்வே நிர்வாக அனுமதியுடன் தான் காவலர்களை நியமிக்க முடியும்.  50 சதவீதம் சம்பளம் ரயில்வே நிர்வாகத்தால் தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வருகிறது.  விரைவில் ரயில்வே பாதுகாப்பு குறித்து ரயில்வே அதிகாரிகளுடன், காவல்துறை ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ஜெயலலிதா பல்கலை விவகாரம்: அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது

G SaravanaKumar

பருத்தி கொள்முதலை மத்திய அரசு உடனடியாகத் தொடங்க கோரிக்கை : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!!

Web Editor

மதுரையில் இஸ்ரேல், இந்திய கொடியை பறக்க விட்ட 4 பேர் கைது!

Student Reporter

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading