28 C
Chennai
December 7, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் செய்திகள்

5 மாநில தேர்தல்; ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் தகவல்

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும், தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதிகள் அக்டோபர் 9 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன.

இதையும் படியுங்கள்:சிறைகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு; சிறைத்துறை தகவல் – ஒப்புதல் பெற தமிழ்நாடு அரசுக்கு கடிதம்

அதனை தொடர்ந்து, தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தற்போது வரை பல்வேறு அரசியல் கட்சிகளால் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.1760 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள், மது உள்ளிட்ட போதைப் பொருட்கள், பணம் ஆகியவை தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த தகவலை இந்தியத் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. மேலும், ஐந்து மாநிலங்களில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது ரூ.239 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதை விட இந்த தேர்தலில் 7 மடங்கு அதிகமாக பரிசுப் பொருட்கள், மது, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy