மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ1கோடிக்கு மேல் அபராதம்- காவல்துறை அதிரடி

சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மதுபோதையில்…

சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை
தெரிவித்துள்ளது.

சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று
மதுபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே மது போதையில் வாகனம் ஓட்டுவதற்கு
கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்கிற அடிப்படையில் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி அபராதத் தொகை  அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தை முறையாக செலுத்துவதில்லை.

மேலும் நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபாரதம் செலுத்துவதில்லை. இதனால் 8,227 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.  இதுபோன்ற விதி மீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் (Call centers) மூலம்
தகவல் தெரிவித்து.

கடந்த 29.01.2023 முதல் 04.02.2023 வரை அபராதம் செலுத்தாதவர்களை  நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் அழைப்பு மையங்களின் அழைப்பை ஏற்று 358 பேர் ஆஜராகி அவர்களது நிலுவை வழக்குகளை இணையதளம் மூலம் செலுத்தினார்கள்.

மேலும் பலர் அழைப்பு மையங்களுக்கு வெளியில் பணம் செலுத்தியதால், அவர்கள் வேறுவிதமாக அபராதம் செலுத்தியிருந்தாலும், அழைப்பு மையங்களின் உதவியுடன் முடிந்த வழக்குகளின் விவரங்களையும் அபராதத் தொகையையும், இந்த அழைப்பு மையங்களில் இருந்து சேகரித்தனர்.

இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் 10 அழைப்பு மையங்களில் 843 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக 87,13,000/- செலுத்தப்பட்டன. கடந்த வாரம் அழைப்பு மையங்களின் இதேபோன்ற நடவடிக்கைகளால் 785 வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.81,85,500/- அபராதம் தொகை செலுத்தப்பட்டன. இவ்வாறு கடந்த இரண்டு வாரங்களில் அழைப்பு மையங்கள் மூலம் நிறுவையில் இருந்த 1,628 மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள் தீர்க்கப்பட்டு 1,68,98,500 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்படுவதாகவும், ஏற்கனவே இதுபோன்று மது போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு இதுவரை 319 நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்த செயல்பாட்டில் உள்ளன
என்று சென்னை போக்குவரத்துறை காவல்துறை தெரிவித்துள்ளது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.